சென்னை: இந்திய பெருங்கடலில் இன்று  முற்பகல்  திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை 10.30 மணி அளவில்  இந்திய பெருங்கடலில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியாக 10.49 மணி அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக இலங்கை தெரிவித்துள்ளது.