டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பாதிப்பு தலைநகர் டெல்லி, ராஜஸ்தானிலும் எதிரொலித்தது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின- இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருவுக்கு வந்தனர்.

இன்று பிற்பகல் (செவ்வாயன்று)  நேபாளத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு,  தலைநகர் டெல்லி மற்றும் ராஜஸ்தான் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியதாக,  ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம், இன்று  மதியம் 2.28 மணியளவில்  ஏற்பட்டது. நேபாளத்தின் ஜும்லா மாவட்டத்தின் வடமேற்கில் 10 கிமீ மற்றும் 63 கிமீ ஆழத்தில், தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கிமீ தொலைவில் பதிவாகியுள்ளது. உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

இந்த நிலநடுக்கமானது, அதே பெல்ட்டில் அமைந்துள்ள தலைநகர் டெல்லி மற்றும் ராஜஸ்தானிலும் எதிரொலித்து. இதனால், கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின, பொதுமக்கள், வீட்டில் இருந்து வெளியேறி,  தெருவுக்கு ஒடிவந்தனர்.  மக்கள் அச்சமடைந்தனர்.