ஜம்மு

இன்று நள்ளிரவில் ஜம்மு காஷ்மீரில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  ரிக்டர் அளவில் 7.6 ஆகப் பதிவானது. இந்த் நிலநடுக்கம் அந்நாட்டின் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா மாகாணங்களைத் தாக்கியது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதுவரை இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக ரஷியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இன்று நள்ளிரவு 12.38 மணி அளவில் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆகப் பதிவாகி உள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வரவில்லை.