காத்மண்டு 

இன்று காலை நேபாளத்தில் 5,3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 7.24 மணி அளவில் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இது ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிருப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்த நில நடுக்கம் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு, அதன் அண்டை மாவட்டங்களான தோதி, அச்சாம், பஜுரா மற்றும் சூடூர் பச்சிம் மாகாணத்திற்கு உட்பட்ட பிற பகுதிகளில் உணரப்பட்டது.

மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து பாதுகாப்புக்காக வேறு இடங்களுக்குத் தப்பியோடினர்.  நிலநடுக்கத்தில், சில வீடுகள் முழுவதுமோ அல்லது பகுதியாகவோ இடிந்து விழுந்தன என தகவல்கள் தெரிவித்தன.

ஏற்கனவே கடந்த 3-ந்தேதி நேபாளத்தின் மேற்கு பகுதியில் இதேபோன்றதொரு நிலநடுக்கம் ஏற்பட்டு அதுவும் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகி இருந்தது.