காபூல்

ன்று அதிகாலை ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இன்று அதிகாலை 1.09 மணிக்கு ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கம் 150 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

கடந்த ஒரே மாதத்தில் 4 ஆம் முறையாக ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 7-ந்தேதி ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 4 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். அப்போது ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்து விட்டன என தாலிபான் அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

அந்நாட்டுப் பேரிடர் மேலாண் அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், 20 கிராமங்களில் இருந்த 1,983 குடியிருப்பு வீடுகள் அழிந்து விட்டன என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 11-ஆம் தேதி ரிக்டரில் 6.1 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.  பிறகு 13-ந்தேதி ரிக்டரில் 4.6 அளவிலான நிலநடுக்கமும், 15-ஆம் தேதி ரிக்டரில் 5.4 அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டது.

இந்த மாதத்தில் 4-ஆவது முறையாக ஏற்பட்டு உள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.