புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம் வீடு உள்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம்  முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சொந்தமான இடங்களில் ஆகஸ்டு 10ந்தேதி நடைபெற்றது. அப்போது  ஏராளமான ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருந்தனர். அதை ஆய்வு செய்து வந்ததுடன், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்து செப்டம்பர் 3ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார்  சோதனை நடத்தி சென்றனர்.

இந்த நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமாக இருக்கும் புதுக்கோட்டை முகாணந்தம் என்பவருக்கு தொடர்புடைய சொந்தமான சாப்பிங் மால், மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை முருகானந்தம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலராக இருந்து வருகிறார். அவரது வீடு மட்டுமின்றி, அவரது உறவினர்கள், சகோதரர்கள் வீடுகள், ஒப்பந்ததாரர் பழனிவேல், அரசு ஊழியர் ரவிச்சந்திரன் வீடுகள் உள்பட 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.