சென்னை

ழை எச்சரிக்கை காரணமாக இன்றும் பல மாவட்டங்களில் கலவி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்திய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை கரையைக் கடந்தது.  தமிழகத்தில் பல பகுதிகளில் மிகக் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது.  தொடர் மழையால் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மிகக் கனமழைக்கான ரெட் அல்ர்ட் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.  ஆயினும் கனமழை எச்சரிக்கை தொடர்கிறது.   இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   தமிழகத்தில் பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று அதாவது நவம்பர் 12 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், கன்யாகுமரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  மேலும், சேலம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.