சென்னை

ன்று முதல் 31 ஆம் தேதி வரை புறநகர் மின்சார ரயில்கள் ஒரு பகுதி பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றம்  செய்யப்படுகிறது.

இன்று முதல் சென்னை சென்டிரல் – கூடூர் மார்க்கத்தில்  எளாவூர்மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.   இந்த பணி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  எனவே புறநகர் மின்சார ரயில்கள் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தென்னக ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் காணப்படுவதாவது :

சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் வரும் 23, 24, 25, 26, 27, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் வரும் 23, 24, 25, 26, 27, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

சூலூர்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் வரும் 23, 24, 25, 26, 27, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில், சூலூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும்.

சூலூர்பேட்டையிலிருந்து மாலை 5.15 மணிக்கு வேளச்சேரி வரை செல்லும் ரயில் மார்ச் 23, 24, 25, 26, 27, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சூலூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.15 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் வரும் 28 (ஞாயிற்றுக்கிழமை) கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும் சூலூர்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் வரும் 28 (ஞாயிற்றுக்கிழமை) சூலூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும்.

என அறிவிக்கப்பட்டுள்ளது.