சிம்லா

டும் பனிப் பொழிவு காரணமாக இமாச்சலப்பிரதேசத்தில் 560 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது.  குறிப்பாக இமாசல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. எனவே6 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பல்வேறு பகுதிகளிலும் 566-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் 700 மின் விநியோக திட்டங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

மாநிலத்தில் கின்னார், குல்லு, லஹால்-ஸ்பிட்டி, சம்பா மற்றும் சிம்லா மாவட்டங்களில் புதிதாகப் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் சிர்மார், கங்ரா மற்றும் மாண்டி மாவட்டங்களில் புதிதாக பனிப்படலம் ஏற்பட்டு உள்ளது.

இமாசல பிரதேச பொதுப்பணித் துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங்,

”இன்று பிற்பகலுக்குள் 138 சாலைகளில் உள்ள பனியை நீக்கும் பணிகள்மேற்கொள்ளப்படும். இந்த பணிகளுக்காக 206 இயந்திரங்கள் மற்றும் குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 பனிப்பொழிவால், ரூ.450 கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

பனிப்பொழிவால், நீண்டகால வறட்சியானது மறைந்து, விவசாயிகள் பலனடைவார்கள். விரைவில் போக்குவரத்துக்காகவும் சாலை திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்  

என்று கூறியுள்ளார்.