டில்லி:

கடுமையான பனி மூட்டம் காரணமாக 21 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,‘‘ டில்லியில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் போதிய வெளிச்சம் இல்லாமல் ரெயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 21 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 55 ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. 23 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.