கோலாப்பூர்:

காராஷ்டிராவில் மினி பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 12 பேர் பரிதாபமாக உயரிழந்தனர்.  மேலும் 3 பேர் படுகாயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு மகாராஷ்டிரா மாநிலத்தில்,  நேற்று நள்ளிரவு  ரத்னகிரி கோலாப்பூர் இடையே சென்று கொண்டிருந்த மினி பஸ், கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், மேலும் 3 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.