பரிமலை

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்குப் பக்தர்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.   கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் குறைந்த அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.    ஆன்லைன் மூலம் பதிவு செய்துக் கொண்ட பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது

மேலும் கொரோனா பரவல் காரணமாகப் பக்தர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  இரு டோஸ் கொரோனா தடுப்பூசி மற்றும் 48 மணி நேரத்துக்கு உட்பட்ட கொரோனா பரிசோதனை நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் மிகவும் பலத்த கனமழை பெய்து வருகிறது.  இதையொட்டி சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தடை 19 ஆம் தேதி வரை தொடரும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.