டில்லி

டில்லியில் ஏற்பட்டுள்ள அடர் பனியால் 24 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக  வட இந்தியாவில் குளிர் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க் கிழமை அன்று இந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக குளிரான தினம் பதிவானது. அன்று, அதிகபட்ச வெப்பநிலை 13.4 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகி இருந்தது.  இயல்பான வெப்பநிலையை விடட  6 டிகிரி குறைவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 5.3 பட்டம் செல்சியஸ் ஆக இருந்தது.

டில்லியில் நேற்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகி இருந்தது. எனவே நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது. தவிர டில்லியில் காற்று தரம் மிக மோசம் என்ற அளவில் பதிவாகி இருந்தது. பல பகுதிகளில் அடர் பனி ஏற்பட்டுள்ளது.

இந்த அடர் பனியால் வாகன போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் பாதிப்படைந்து உள்ளன. இந்நிலை வருகிற 14 ஆம்தேதி வரை நீடிக்கும் எனவும் ஜம்மு பிரிவு, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், வட ராஜஸ்தான், வட மத்திய பிரதேசம், ஒடிசா மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதிகளிலும் அதிக பனிக்கான சூழல் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று டில்லியில், அடர் பனியால் 24 ரயில்கள் மிக காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. டில்லிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரக் கூடிய ரயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்புகளால் பயணிகள் மற்றும் அவர்களை வரவேற்கக் காத்திருக்கும் உறவினர்களும் சிரமமடைந்து வருகின்றனர்.