சென்னை:
மிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால் 33 சதவிதத்திற்கும் அதிகமாக பயிர்ச்சேதம் ஏற்பட்ட பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2022ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால், 33%-க்கும் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த பகுதிகளாக

  • புதுக்கோட்டை – ஆவுடையார்கோவில், மணமேல்குடி.
  • சிவகங்கை – தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை.
  • ராமநாதபுரம் – போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை.
  • தென்காசி – ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில்
  • தூத்துக்குடி – ஆள்வார்திருநகரி.
  • விருதுநகர் – நரிக்குடி, திருச்சுழி ஆகிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.