கோவா:

கோவாவில் பொது இடங்களில் மது குடிப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவாவில் பொது அமைப்பின் பிரதிநிதிகள், சுற்றுலாத்துறையின் பிரதிநிதிகள், காவல்துறையினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ‘‘பொது இடங்களில் மது குடிப்பவர்கள்பொது மக்களுக்கு இடையூறு செய்வதாக புகார்கள் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் பொது இடங்களில் மது அருந்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று முடிவு செய்யப்பட்டது. இதை காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.