சென்னை:
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை வர உள்ளார்.

நடைபெற உள்ள குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநா் திரௌபதி முா்மு அறிவிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 25-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் தனது வேட்புமனுவையும் முா்மு தாக்கல் செய்தாா்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு ஆதரவு திரட்டுவதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இதன் தொடர்சியாக, திரெளபதி முர்மு இன்று சென்னை வர உள்ளார்.

இன்று அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோருகிறார்.