சென்னை: சென்னை கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு, மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் D.P.I வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்று அழைக்கப்படும் என்றும்,  சிறந்த பள்ளிகளுக்கு  பேராசிரியர்  பெயரில் விருதும் வழங்கப்படும்  என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்தார்.