மீரட்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகர அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்களைத் தாக்கிய மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் கமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த தீபக் என்பவரின் மகன் 5 வயது சிறுவன் குணால் விளையாடும் போது அவனது கட்டைவிரல் துண்டானது. உறவினர்கள் சிறுவனை உடனடியாக அழைத்துக்கொண்டு மீரட் அரசு மருத்துவமனைக்குச் சென்று உள்ளனர்.

அந்த சிறுவன் வலியால் துடித்தபோதும் அங்கு இருந்த பயிற்சி மம்ருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் காலம் கடத்தி உள்ளனர்.  இதையொட்டி குணாலின் உறவினர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அனைவரும் சேர்ந்து குணாலின் உறவினர்களை விரட்டி விரட்டி அடித்து உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்து உள்ளனர்.  காவல்துறையினர் அந்த மருத்துவர்கள்ர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 3 ஜூனியர் மருத்துவர்கள் இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர்.சி.குப்தா தெரிவித்துள்ளார்.