சென்னை:

ல்லோரும் தியானம் செய்யுங்கள் என்றுதான் 31ஆம் தேதி ரஜினி அறிவிக்கப்போகிறார் என்று டிடிவி தினகரனின்  ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கிண்டலடித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக ரசிகர்கள் மத்தியில் பேசிய  அவர், தனது அரசியல் பிரவேசம்  குறித்து 31ஆம் தேதி அறிவிப்பதாக கூறினார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு குறித்து அரசியல் பிரமுகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டிடிவி தினகரனின்  ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

“ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவே மாட்டார். 31ஆம் தேதி அரசியலுக்கு வர மாட்டேன் என்றுதான் அறிவிக்கப்போகிறார்.

அனைவரும் தியானம் செய்யுங்கள் என்றுதான் ரஜினி 31ஆம் தேதி அறிவிக்கப் போகிறார். ஆகவே அவர் அரசியலுக்கு வருவார் நம்பியிருப்பவர்கள் ஏமாறப்போகிறார்கள்.

அரசியல் ஒன்றும் சிறு பிள்ளை விளையாட்டு அல்ல, மணல் வீடு கட்டி மகிழ்வதல்ல.

அரசியலுக்கு வரவேண்டும் என்றால் ரத்தத்தையும் சதையையும் காணிக்கையாக செலுத்த வேண்டும் ஆகவே ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துதான் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் தமிழ்நாடு இல்லை என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.