சென்னை: திமுக எம்.பி. கனிமொழி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில், பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை திமுகவில்  இருந்து நீக்கம் செய்து, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்,.

சென்னை விருகம்பாக்கத்தில்  நடைபெற்ற திமுக பொதுக்கூட்டர்ததில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது பெரும் சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து,  இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திமுக நிர்வாகிகள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

இநத் நிலையில், திமுக இளைஞர் அணி நிர்வாகிகளான   எஸ்.பிரவீன் மற்றும் சி.ஏகாம்பரம் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கனிமொழி பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த 2 திமுக இளைஞரணி நிர்வாகிகள் கைது!