சென்னை: தமிழ்நாட்டில்,  எஸ்.ஐ.ஆர். படிவத்திற்கான ஆவணமாக, ஆதாரை மட்டுமே ஏற்க வேண்டும், கூடுதல் ஆவணங்கள் கேட்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் எழுதி உள்ளதுரு.

எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள் கேட்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் எஸ் ஐ ஆர் பணிகள் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14 ஆம் தேதி உடன் முடிவடைந்தது. வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இரட்டை பதிவு, கண்டறிய முடியாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் தமிழகத்தில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 12.43 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உள்ளது. எஸ்.ஐ.ஆர் படிவத்தில் 2002, 2005-ல் சம்பந்தப்பட்ட வாக்காளர் அல்லது அவர்களின் உறவினர்களின் பெயர் குறித்த விவரங்களை தராத வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 13 ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,   எஸ்.ஐ.ஆர். படிவத்திற்கான ஆவணமாக, ஆதாரை மட்டுமே ஏற்க வேண்டும், கூடுதல் ஆவணங்களை கேட்கும் முடிவை கைவிட வேண்டும்  திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில்,   வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதாரை மட்டுமே ஆவணமாக ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ளனர்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் காலம் டிசம்பர் 19 அன்று தொடங்கி ஜனவரி 18, 2026 வரை தொடரும். டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி ஆகும். சுமார் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் 5.43 கோடியாக குறைந்துள்ளனர். டிசம்பர் 29ஆம் தேதி நிலவரப்படி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்காக (படிவம் 6 மற்றும் 6A) 7,32,367 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கக் கோரி (படிவம் 7) 9,450 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். சமீபத்தில், விடுமுறை நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் (டிசம்பர் 27 மற்றும் 28) மட்டும், 5.58 லட்சம் பேர் பெயர் சேர்க்கவும், 8,260 பேர் பெயர் நீக்கம் செய்யவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

12 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்: பெயர் சேர்க்கும் படிவங்களை வழங்க ஜன.18 வரை அவகாசம் ! தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்!

[youtube-feed feed=1]