சென்னை: மனிதனை மனிதனாக நடத்துவது திமுக என்று  அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் சந்தித்து பேசினார். அப்போது, அமைச்சர் ஒரு சேரிலும், ஜீயர் ஒரு சோபாவிலும் அமர்ந்து உரையாடினர்.

இதை சிலர் சர்ச்சையாக்கினர். இதுகுறித்த செய்தியளார்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, வேலையில்லாத சிலர் இதுபோன்று பேசி வருகின்றனர் என்று புறந்தள்ளியவர்,

மனிதனை மனிதனாக நடத்தும் கட்சி  திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் கூறியதுடன், முதல்வர் ஸ்டாலின், மனிதனை மனிதானவே நடத்ததும்படி அறிவுறுத்தி உள்ளார் என்று விளக்கம் அளித்தார்.