விழுப்புரம்

மிழக அளுநருக்கு  கருப்புக்கொடி காட்டி விழுப்புரத்தில் திமுக போராட்டம் நடத்தி உள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு வந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.  திமுக உள்ளிட்ட பல எதிர்க் கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.   அதன் பிறகு ஆளுநர் தனது ஆய்வை சில மாதங்களுக்கு நிறுத்தி வைத்தார்.   தர்போது தனது ஆய்வை ஆளுநர் மீண்டும் தொடங்கி உள்ளார்.

இதற்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மீண்டும் வலுத்து வருகின்ரது.   இன்று விழுப்புரத்தில் ஆய்வுப் பணிகளுக்காக ஆளுநர் சென்றுள்ளார்.  அவருக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுக கருப்புக் காடி காட்டி போராட்டம் நடத்தி உள்ளது.

போராட்டக்காரர்கள் ஆளுநர் மக்களாட்சி அதிகாரத்தில் தலையிடுவதாகவும் அவரைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.    திமுக நடத்திய இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலைச் சிறுத்தை கட்சியினரும் பங்கு கொண்டுள்ளனர்.