டில்லி,

2ஜி வழக்கில் இருந்து விடுதலையான திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அப்போதைய  தலைமை ஆடிட்டர் ஜெனரல் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சிஏஜி வினோத்ராய், தன்மீதான ஆ.ராசாவின் குற்றச்சாட்டு குறித்து தான்,  மவுனம் காப்பதற்கு காரணம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

`2G SAGA Unfolds’ என்ற ராஜா எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.  இந்த புத்தகத்தில், பிரதமர் மன்மோகன் சிங், சிதம்பரம் உள்பட காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் சிஏசி தலைவர் வினோத்ராய் குறித்து  எழுதப்பட்டுள்ளது.

புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ராஜா,  2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு என வினோத்ராய் அளித்த அறிக்கை, அரசை வீழ்த்த பயன்படுத்தப்பட்ட சதி எனவும், இந்த சதியை நிறைவேற்றவே வினோத்ராய் பயன்படுத்தப்பட்ட்ர் என்று  குற்றம் சாட்டியிருந்தார்.

இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வினோத் ராய் தனது மவுனத்திற்கான காரணம் நேரம் வரும் போது தெரியும் என்று கூறினார்.