சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகழக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ரேலா தனியார் மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது.
மனைவி மகளுடன் ஆ.ராசா

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான ரேலா மருத்துவமனையில் கடந்தசில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலி நேற்று நேரில் சென்று விசாரித்து வந்தார்.

இந்த நிலையில், ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி கவலைக்கிடமாக உள்ளதாக ரேலா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பரமேஸ்வரி கடந்த 6 மாதமாக புற்றுநோயை எதிர்த்து போராடி வந்தார். தற்போது நோயின் தாக்கம் காரணமாக, அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்து சிறப்பு நிபுணர்கள், புற்றுநோய் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வெண்டிலேட்டர் உதவியுடன் பரமேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக  மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.