சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ம் தேதி திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் வரும் 21ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிகிறது. இந்த நிலையில், அன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிங்ககப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறும். அப்போது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.