சென்னை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜே அன்பழகன்  உடல்நிலை முன்னேற்றம் இன்றி உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினரான ஜே அன்பழகனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவர் ரிலா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

கடந்த 2 ஆம் தேதி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆக்சிஜன் தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவர் வெண்டிலேட்டரில் வைக்கபட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரமாக அவருடைய உடல்நிலையில் சிறிதும் முன்னேற்றம் இல்லாமல் மேலும் சீர் கெட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.