சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் நிலையில், இன்று புதிதாக 1384  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தமிழகம் முழுவதும் 585 கொரோனா நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 14901  ஆக உயர்ந்துள்ளது.

இன்று 12 பேர் மரணம் அடைந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டுள்ள 1384 பேரில், 1072 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்துள்ளது.  இவர்களில் 9066 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 11 பேர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள்.

தற்போதைய நிலையில், கொரோனா பாதிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12,132

இன்று சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15, 991.

ஜூன் 4 நிலவரப்படி தமிழ்நாடு கோவிட் 19 சோதனை புள்ளிவிவரங்கள்:

இன்று 15,991 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இதுவரை 5,20,286 நபர்கள் சோதனை செய்தனர்.

16,447 மாதிரிகள் இன்று சோதனை செய்யப்பட்டன. 588 மாதிரிகள் செயல்பாட்டில் உள்ளன.

12 வயதிற்குட்பட்ட 1506 குழந்தைகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.