சென்னை: கச்சிராயபாளையம் அருகே அண்ணா சிலைக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையைக் கொளுத்தியுள்ளது கண்டனத்திற்குரியது.

தமிழகத்தை வன்முறைக்காடாக்க நினைப்பவர்களை மக்கள்  தண்டிப்பர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகளும் சிதைக்கப்படுகின்றன. ஒடுக்கிட வக்கற்ற முதலமைச்சரின் போக்கு வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார்.