சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தி.மு.க தேர்தல் அறிக்கையை தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய ஸ்டாலின்,  திமுக தேர்தல் அறிக்கைதான், தேர்தல் கதாநாயகன் என்றும்,  நேற்று வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து, தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன் என்றார்.

மேலும்,  டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும்,  அதில்,  கல்வி, பெண்கள் முன்னேற்றம், வேளாண் துறை, மருத்துவப்படிப்பு, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்றார், தொடர்ந்து தேர்தல் அறிக்கையை வாசித்தார். அதன்படி,

உலக பொதுமறையான திருக்குறளை  தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.

ரேசனில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்

ரேசனில் உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.

ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.

பெட் ரோல் லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் 4 ரூபாய் விலை குறைக்கப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும்

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்

கொரோனா நிவாரணத்தொகையாக ரூ.4000 வழங்கப்படும்

இந்து ஆலயங்கள் புனரமைப்பு பணிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

இந்துகோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல தலா ரூ.25ஆயிரம் வழங்கப்படும்

தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் புனரமைப்புக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

தமிழக ஆறுகள் மாசடையாமல் தடுக்க ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்

பத்திரிக்கையாளர், ஊடகத்துறையினர் நலனுக்கு தனி வாரியம் அமைக்கப்படும்

ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட ரூ.10,000 மானியம்

தல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும்

கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 70 வயதுக்கு மேல் 10%, 80 வயதுக்கு மேல் 10% உயர்த்தி வழங்கப்படும்

முக்கிய மலை கோவில்களில் கேபிள் கார் வசதி

32 லட்சம் கைம்பெண்கள், மாற்று திறனாளிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக உயர்த்தப்படும்

கலைஞர் காப்பீடு திட்டம், வருமுன் காப்பீடு திட்டம் மேம்படுத்தப்படும்

தமிழ்நாடு ஆறுகள் மேம்பாடு திட்டம் உருவாக்கப்படும்

பணிக்காலத்தில் இறக்கும் ஆசிரியர், அரசு ஊழியர் குடும்பங்களுக்காக நிதி 5 லட்ச ரூபாய்

சிறு,குறு விவசாயிகள் மின் மோட்டார்கள் வாங்க நிதி

மகளிர் பேறு கால உதவித்தொகை 24,000 ரூபாயாக உயர்வு

50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

வேலை இல்லா பட்டதாரிகள் குறுத் தொழில் தொடங்க 20 லட்ச ரூபாய் கடன்

கனிமங்கள், தாது மணல் ஆகியவற்றை அரசே நடத்தும்

அரசு துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியம்

கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ 4000

உழவர் சந்தை அனைத்து நகரங்களுக்கும் விரிவாக்கப்படும்

நீர் மேலாண்மை ஆணையம் அமைந்திட சட்டம் கொண்டு வரப்படும்

2000 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்படும்

அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட கடன் சுமையை தீர்க்க பொருளாதார மேலாண்மை குழு

பொது பட்டியலில் உள்ள கல்வி பட்டியலை மாநில பட்டியலில் கொண்டு வர நடவடிக்கை

8 ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை

வேளாண்மை துறைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கை

இயற்கை வேளாண்மைக்கு என்று தனிப்பிரிவு<

இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்

பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம்

தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க வற்புறுத்தல்

உள்பட ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.