சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து சென்னை அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  மயிலாப்பூரில் உள்ள பிரபல சாய்பாபா கோவில் மற்றும் சென்னை அருகே அட்டை பெட்டி நிறுவனம் உள்பட பல இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டன. தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை  தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

சென்னையில் மட்டும் 140 இடங்களில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்ததால் தீ விபத்தும் ஏற்பட்டது என தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது.  தமிழ்நாடு முழுவதும் 364 இடங்களில் தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. தீ விபத்தால் உள்நோயாளிகளாக 47 பேரும், புறநோயாளிகளாக 622 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 சென்னையில் உள்ள மயிலாப்பூர் சாய்பாபா கோயிலின் மேற்கூரையில் நேற்று (நவம்பர் 12) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோயிலின் மேற்கூரையில் இருந்து தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுபோல, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே தீபாவளி பண்டிகை கொண்டாட மூடப்பட்ட அட்டை கம்பெனியில் பயங்கர தீ விபத்து அருகில் இருந்த அலுமினியம் கோட்டிங் கம்பெனிக்கும் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் நேற்று தீபாவளி பண்டிகை பொதுமக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், சில இடங்களில் ராக்கெட் போன்ற பட்டாசுகள் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

சென்னை  மயிலாப்பூர் சாய்பாபா கோயிலின் மேற்கூரையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  அருகே பட்டாசு வெடித்தபோது, அதிதன்முலம் தீ பரவியதாக கூறப்படுகிறது. மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  தீ விபத்து குறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது,

அந்த வீடியோவில்,  கோயிலின் கூரையில் இருந்து தீப்பிழம்புகள் வெளியே வருவதை தெளிவாகக் காணலாம். கோயிலைப் பார்க்கும்போது, இங்கு கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது, ஏனெனில் மூங்கில் குச்சிகளால் செய்யப்பட்ட ஒரு சட்டமும் வீடியோவில் தெரியும். இதனால் தீ வேகமாக பரவியதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கோவிலின் மேற்கூரையில் தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பதை தொடர்ந்து கண்டுபிடித்து வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

அதே வேளையில்,  குன்றத்தூர் அருகே தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் காரணமாக,  மூடப்பட்ட அட்டை கம்பெனியில் பயங்கர தீ விபத்து அருகில் இருந்த அலுமினியம் கோட்டிங் கம்பெனிக்கும் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.  நேற்று  இரவு அட்டை கம்பெனியில் இருந்து திடீரென புகை வந்த நிலையில் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து பூந்தமல்லி, மதுரவாயல், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 7 வாகனங்களில் விரைந்து வந்த 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கம்பெனியில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீணை அணைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அட்டை கம்பெனி தீயில் முழுவதும் எரிந்து நாசமான நிலையில் அதில் தயார் நிலையில் வைக்கப்பட்ட அட்டை பெட்டிகள், மூலப்பொருட்கள் மற்றும் எந்திரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கு காரணம் மின் கசிவா, நாச வேலையா அல்லது பட்டாசு வெடித்ததா என்ற கோணத்தில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தீபாவளி அன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் 364 இடங்களில் தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 140 இடங்களில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்ததால் தீ விபத்தும் ஏற்பட்டது என தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது.   தீ விபத்தால் உள்நோயாளிகளாக 47 பேரும், புறநோயாளிகளாக 622 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளியான நேற்று நாட்டின் பல பகுதிகளில் தீ விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள வணிக கட்டிடத்தில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் திரையரங்கில் இருந்த திரை மற்றும் நாற்காலிகள் எரிந்து சாம்பலாயின. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள 14 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஏழாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினரின் உளவுத்துறையால், 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 15 பேர் மீட்கப்பட்டதாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சோனிபட்டின் பஹல்கர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் தேவேந்திரா தெரிவித்தார். மேலும், இந்த தீ விபத்து சனிக்கிழமை இரவு நடந்தது. சிறிது நேரத்தின் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் டெல்லியில் இருந்து சில தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தன என்றும் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பிளாஸ்டிக் பந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எவ்வாறாயினும், இந்த தீ விபத்தில் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆந்திரப் பிரதேச தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (ஏபிஐஐசி) மண்டலத்தில் அமைந்துள்ள எவர்கிரீன் பாலிமர் நிறுவனத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் எச்சங்களை அகற்ற ஆபரேட்டர் தீ வைத்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.