சென்னை:

மிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 67 பேர் பாதிக்கப்பட்டுஉள்ள நிலையில், எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் என்பது குறித்து, தமிழக அரசு மாவட்ட வாரியான பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இதில் சென்னையில் 22 பேரும், ஈரோடு மாவட்டத்தில் அதிக பட்சமாக  24 பேரும், 4523 பேர் தனிமைப்படுத்தப்படுதில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உளளது. இந்த பட்டியலின் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறித்து மாவட்ட வாரியான பட்டியலை தமிழகஅரசு  வெளியிட்டு உள்ளது.

அதில், இதுவரை 67 பேர் மொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக ஈரோடும், அதைத் தொடர்ந்து சென்னையும் கொரோனா பாதிப்பில் சிக்கிஉள்ளது தெரிய வந்துள்ளது.