சென்னை:

மிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஆலோசனை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 8ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டு 5 நாட்கள் மட்டுமே நடைபெற்று முடிந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யும் வகையில்,  அதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் பட்ஜெட், மானியக் கோரிக்கை கள், புதிய அறிவிப்புகள், பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்க உள்ள நிதி, மானியக்கோரிக்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும், எடப்பாடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று 1 ஒருடம் முடிவடைய உள்ள நிலையில், அதுகுறித்தும் விவாதிக்கப்படும் என்றும்,  அரசின் சாதனைகள் தொடர்பாக ஆண்டு மலர் வெளியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போன்று வரும் 24ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் வர உள்ள நிலையில், நினைவு மண்டபத்திற்கான பணிகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் மறைந்த தமிழக முதல்வர் முழு உருவப்படம் தமிழக சட்டசபையில் திறந்த வைக்கப்பட்டபோது பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ்  தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.