ரூர்

பிரபல திரைப்பட இயக்குநர் அமீர் ஒரு நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் ஃபிரெண்ட்ஸ் ஃபெடரேசன் அமைப்பின் 33 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஓய்வு பெற்ற தாம்பரம் சரக காவல்துறைத் தலைவர் ரவி, திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு இயக்குநர் அமீர் செய்தியாளர்களிடம்,

“நான் அண்ணாமலையை மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட ஒரு தலைவராக நான் பார்க்கவில்லை..  தன்னை‘பெருமைமிக்க கன்னடர்’ எனக் கூறிக் கொண்ட அவர், தமிழகத்தில் திடீரென்று அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று கூறி வருகிறார்.

திமுகவின் ஊழல் பட்டியலில் வெளியிடுவேன் என்றவர், இப்போது சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.  

அண்ணாமலை   காவல் துறையில் பணியாற்றியதால் நிறைய குற்றவாளிகளைப்  பார்த்திருப்பார்  ஆகவே அவ்ர் இப்போதும் குற்றவாளி மனப்பான்மையில் உள்ளார்.

அண்ணாமலை எப்போதும் நேர்மையான அரசியல் செய்ய மாட்டார்.   அதைப் போல அவரை எந்த காலத்திலும் தமிழகத்தின் மீதோ, தமிழ் மொழியின் – தமிழ்த்தாய் வாழ்த்தின் மீதோ அக்கறை கொண்டவராக என்னால் பார்க்க முடியவில்லை”

எனக் கூறி உள்ளார்.