திருமலை:
திருப்பதி மாட வீதியில் கால்களில் செருப்பு அணிந்து நடந்த சம்பவத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு மாட வீதியில் கால்களில் செருப்புகளுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்றது குறித்து செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக கோயில் வளாகத்தை விட்டு வெளியேறி மீண்டும் வந்த போது, போட்டோ எடுக்கும் அவசரத்தில் கோயிலுக்கு வெளியே திரும்பி செல்லும் போத செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை எனவும், செருப்பு அணிந்து சென்றது குறித்து தங்களால் புண்படுத்தப்பட்டவர்களிடம் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.