பின்லாந்து

பின்லாந்தில் உலகின் முதல் டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நீதி  ஃபின்ஏர், ஃபின்னிஸ் காவல்துறை மற்றும் ஃபின்ஏவியா விமான நிலைய ஆபரேட்டருடன் இணைந்து  டிஜிட்டல் பாஸ்போர்ட்டுக்கான ஒரு பைலட் திட்டத்தைப் பின்லாந்து அரசு தொடங்கியது. இந்த திட்டம்  பயண தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த டிஜிட்டல் பாஸ்போர்ட்களை சோதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

இந்த திட்டம் முதலில்   ஹெல்சின்கியில் இருந்து இங்கிலாந்து திரும்பும் சில ஃபின்ஏர் விமான பயணிகளிடம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு ஃபின்டிசிசி பைலட் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயணிகள் தங்கள் முக அங்கீகாரம் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைச் சரிபார்க்க வேண்டும். பின்னர், ஃபின்னிஸ் எல்லை காவலருக்குச் செயலி மூலம் இந்த தகவல்களை அவர்கள் அனுப்ப வேண்டும்.

மொபைல் செயலியை அடிப்படையாகக் கொண்ட.இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட் க்கு    பயணிகள் தங்கள் தகவல்களை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்து, தேவையான இடங்களில் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. எனவே தனியாக பாஸ்போர்ட் புத்தகங்களை உடன் எடுத்துச் செல்ல தேவையில்லை. 

வரும் 2024 பிப்ரவரி வரை  டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. பிறகு, இத்திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று பின்லாந்து தெரிவித்துள்ளது. அனைவருக்கும்  ஸ்மார்ட்போன் பயன்பாடு அவசியமானதாக மாறியுள்ளதால் எதிர்காலத்தில் டிஜிட்டல் பாஸ்போர்ட் எல்லா நாடுகளிலும் பிரபலமாகும் என்று தெரிகிறது.