ms-dhoni-wallpapers

நியூசிலாந்து அணியை, மூன்று டெஸ்ட் போட்டியிலும் வீழ்த்தி டெஸ்ட் தரவரிசையில், இந்திய அணி முதலிடம் பிடித்துவிட்டது. 250வது டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான வெற்றியை பெற்றுத்தந்துள்ளது விராட்கோலி தலைமையிலானா அணி.

டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில், ஒருநாள் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் நியூசிலாந்து அணி உள்ளது. ஒருநாள் போட்டிக்கு தோனி தலைமையில், இளைஞர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். டெஸ்ட் போட்டியில் கலக்கிய அஸ்வின் ஓய்வுக்கு திரும்பி உள்ளார். மேலும், ஆல்-ரவுண்டர் ஜடேஜாவும் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார். சமி, ஜடேஜா, அஸ்வின் இல்லாமல் ஒருநாள் போட்டியில் கலந்து
கொள்ளும் இந்திய அணிக்கு இது மிகப்பெரிய சவால் தான்.

இளைஞர்களை வைத்து தொடரை கைப்பற்றினால், ‘தோனி யூ ஆர் கிரேட்’ என மீண்டும் ஒரு முறை தன்னுடைய கேப்டன் ஷிப்யை உணர்த்திவிடுவார்.