துபாய்: ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2020 தொடர், அமீரக நாட்டில் துவங்கி, இன்று துபாய் மைதானத்தில் இறுதிப்போட்டி நடக்கிறது.

இதில், ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள மும்பையும், முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள டெல்லியும் மோதுகின்றன.

இன்றையப் போட்டியில் மும்பை வென்றால் 5வது முறையாக கோப்பை வெல்லும் மற்றும் டெல்லி வென்றால், முதன்முறையாக கோப்பையை ஏந்தும். இந்நிலையில், டாஸ் வென்றுள்ள டெல்லி அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

முதல் பிளே ஆஃப் போட்டியில், மும்பைக்கு எதிராக இரண்டாவதாக பேட்டிங் செய்து தோற்ற டெல்லி அணி, இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் ஐதராபாத் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்து வென்றது. இந்நிலையில், இன்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.