டில்லி

டில்லியில் காற்று மாசு அதிகரிப்பால் வரும் 18 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக டில்லியில் வழக்கத்தை விட அதிகமாகக் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. டில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதையொட்டி காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.

டில்லியில், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக அனைத்து பள்ளிகளின் டிசம்பர் மாத குளிர்கால விடுமுறை  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டில்லியில் நாளை முதல் 18 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டில்லி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.