டெல்லி: எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பிக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு பட்டை அணிந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற இன்றைய அமர்வில்   எதிர்க்கட்சி  எம்.பி.க்கள் கருப்புப்பட்டையுடன் பங்கேற்றனர்.

மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை கண்டித்து 12 உறுப்பினர்கள் உள்பட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பாராளுமன்ற வளாக பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.  எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

போராட்டத்தின்போது எம்.பி.க்களின்  கைகளில் கருப்புப்பட்டையுடன் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்னர். தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் மாநிலங்களவை நடவடிக்கையில் கையில் கருப்புப்பட்டை அணிந்து பங்கேற்றனர்.