டெல்லி: கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி  அரசின் மதுபான கொள்கை முறைகேடு  தொடர்பாக இன்று டெல்லி, ஐதராபாத், பஞ்சாப் உள்பட  35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி ஆம்ஆத்தி அரசின் புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு டெல்லியில் மீண்டும் பழைய மது பான கொள்கை அமலுக்கு வந்துள்ளது இதுதொடர்பாக, ஏற்கனவே துணைமுதல்வர் மனிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, டெல்லிஉள்பட நாடு முழுவதும் சோதனைகளை நடத்தியது.  இந்த வழக்கு தொடர்பாக  அமலாக்க இயக்குனரகம் இதுவரை 103க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தியிருக்கிறது. கடந்த மாதம் மதுபான உற்பத்தி நிறுவனமான இண்டோஸ்பிரிட்டின் நிர்வாக இயக்குனர் சமீர் மஹந்த்ருவையும் கைது செய்தது. இந்த விவகாரம் டெல்லியில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில், இன்று மீண்டும் டெல்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது. இ  இந்த நிலையில், இன்று டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள 35 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சில மதுபான வினியோகஸ்தர்கள், நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் சோதனையிடப்படுகின்றன.

இந்த விவகாரத்தில் 11 கலால் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து டெல்லி துணைநிலை கவர்னர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.