மும்பை: 14வது ஐபிஎல் சீஸன், இரண்டாவது லீக் போட்டியில், 189 ரன்கள் இலக்கை விரட்டிவரும் டெல்லி அணி, 12 ஓவர்களில், ஒரு விக்கெட் கூட இழக்காமல், 122 ரன்களைக் குவித்துள்ளது.

இன்றையப் போட்டியில், மிகப்பெரிய இலக்கை, விக்கெட் எதுவும் இழக்காமலேயே எட்டுமா டெல்லி அணி? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

துவக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் அரைசதம் அடித்து ஆடி வருகின்றனர். மொத்தம் 32 பந்துகளை சந்தித்துள்ள ஷா, 59 ரன்களை அடித்துள்ளார். இதில், 2 சிக்ஸர்கள் & 8 பவுண்டரிகள் அடக்கம்.

மொத்தம் இதுவரை 41 பந்துகளை சந்தித்துள்ள தவான், 62 ரன்களை விளாசியுள்ளார். இதில், 2 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகள் அடக்கம். மொத்தம் 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும், தோனியால், இந்த துவக்க ஜோடியை இன்னும் பிரிக்க முடியவில்லை.

இன்று அதிகமாக வெளுக்கப்பட்டவர் ஷர்துல் தாகுர். அவர் 2 ஓவர்கள் மட்டுமே வீசி, 31 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, டெல்லி அணி, வெற்றிபெற வேண்டுமெனில், 48 பந்துகளில் 67 ரன்கள் எடுக்க வ‍ேண்டும். கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளன.