டெல்லி: விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஆம் ஆத்மி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்றுடன்  19வது நாளாக நடக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய மற்றும் சமூக நல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.

இந் நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக விவசாய அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து திக்ரி எல்லையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இதையடுத்து, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆம் ஆத்மி  அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில், துணை முதல்வர்மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் மற்றும் மூத்த தலைவர் அதிஷி மார்லேனா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.