புதுடெல்லி:

சீனியரான தன்னை புறக்கணித்துவிட்டு, கரம்பீர் சிங்கை கப்பற்படை தளபதியாக நியமிப்பதை எதிர்த்த துணை அட்மிரல் பிமால் வர்மாவின் வாதத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் நிராகரித்தது.


துணை அட்மிரல் கரம்பீர் சிங்கை கப்பற்படை தளபதியாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் நியமித்தது.

சீனியரான தன்னை புறக்கணித்துவிட்டு, கரம்பீர் சிங்கை கப்பற்படை தளபதியாக நியமிப்பது தவறு. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, ராணுவ தீர்ப்பாயத்தில் பிமால் வர்மா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த பாதுகாப்புத் துறை அமைச்சகம், அடுத்த கப்பற்படை தளபதியை தேர்வு செய்வதில் வலுவான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.

உயர்ந்த பதவிக்கான நியமனத்தில் இத்தகைய கேள்வி எழுப்ப முடியாது என்று பதில் அளித்தது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு தீர்ப்பாயம் தள்ளிவைத்தது.