சென்னை: அவதூறு வழக்கில்  திமுக தலைவர் ஸ்டாலின் மே 6ஆம் தேதி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  மீது, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. முதல்வர்   பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை குறித்தும், வாக்கி-டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும் ஸ்டாலின் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, ஸ்டாலின் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இரு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தது. புகாரில்,  ஸ்டாலினின் கருத்து எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த இரு அவதூறு வழக்குகளும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. வழக்குகள் நேற்று (ஏப்ரல் 16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  அப்போது இரு வழக்குகளிலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, மே 6ஆம் தேதி ஸ்டாலின் நேரில்ஆகராக உத்தரவிட்டுள்ளார்.