சென்னை

தமிழக அரசு கோவில் பணியாளர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி ஆணையிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

அதை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  தமிழக அரசு அந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 1-ந்தேதி முதல் கணக்கிட்டு, அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி 46% ஆக வழங்க  உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.