புயலில் சிக்கியோரை  காப்பாற்றிய  50 வீரருக்கு கொரோனா..

மே.வங்காள மாநிலத்தை அண்மையில் புரட்டிப் போட்ட ஆம்பன் புயலில் இருந்து பெருவாரியான மக்களை காப்பாற்றியவர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த வீரர்கள்.

தங்கள் பணிகளை செவ்வனே  முடித்து விட்டு, அவர்கள் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள தங்கள் தளத்துக்கு  தற்போது திரும்பியுள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், மே.வங்க மாநிலம் சென்று விட்டு வந்த 170  வீரர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.

அவர்களில் 50 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று இல்லாத வீரர்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

புயலில் இருந்து மக்களைக் காப்பாற்றிய தேசிய பேரிடர் படை வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது, சக வீரர்களைக் கலங்கச் செய்துள்ளது.