டில்லி

ராஜஸ்தானில் பிபோர்ஜாய் புயலால் 5 இடங்களில் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் கூறி உள்ளார்.

அரபிக் கடலில் உருவான அதி தீவிர புயலான பிபர்ஜாய், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே, 140 கி.மீ., வேகத்தில் பலத்த மழையுடன் கடந்த 15-ம் தேதி கரையைக் கடந்தது.

இதனால் கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் பல இடங்களில் கனமழை பெய்தது.  பிபோர்ஜாய் புயல் குறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

”பிபோர்ஜாய் புயலால் ராஜஸ்தானில் 5 இடங்களில் தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளது. சேதமான தண்டவாளங்களை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது.சேதமான வழித்தடத்தில் செல்லவிருந்த ரயில்கள் உடனடியாக வேறு பாதைக்கு மாற்றப்பட்டன

எனக் கூறி உள்ளார்.