டில்லி

த்திய அரசே டில்லி சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்குக் காரணம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லியின் தெற்கில் உள்ள ஆர்.கே.புரம் பகுதியில் சகோதரிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  பெண்கள்.இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், டில்லி மக்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணரத் தொடங்கி இருப்பதாகவும் டில்லியின் சட்டம், ஒழுங்கை கையாள வேண்டியவர்கள் சட்டம் ஒழுங்கை சரிசெய்யாமல் ஒட்டுமொத்த டில்லி அரசையும் ஒழிக்கச் சதி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் டில்லியில் சட்டம் ஒழுங்கு ஆம் ஆத்மி அரசின் கீழ் இருந்தால் பாதுகாப்பாக இருந்திருக்கும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்