செவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்கள் இருப்பதாக கியூரியாசிட்டி ரோவர் கண்டுபிடித்து உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய்க்கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய கடந்த 2012ம் ஆண்டு தரையிறங்கியது. பூமிக்கு அடுத்து, உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறுகள் க உள்ள கிரக மாக செவ்வாய் கிரகம் கருதப்படும் நிலையில், செவ்வாய் கிரகத்தில் கிரானைட் கற்கள் இருப்ப தாக ரோவர் கண்டுபிடித்துள்ள கடந்த 2013ம் ஆண்டே நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்த னர். ஆயிரக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்பி உள்ள ரோவர் செவ்வாயில் சுமார் 13 மைல்கள் சுற்றித் திரிந்தும், 1,207 அடி உயரம் ஏறியும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
அங்குள்ள கேல் கேட்டர் என்ற வறண்ட ஏரி மையத்தில் 16,404 அடி உயரமுள்ள மலையில் ஏரி ஆய்வுகள் நடத்தி வருகிறது. அதன் பக்கவாட்டில் உள்ள கேல் பள்ளத்தின் உள்ளே ஆராய்ச்சி செய்து வரும் ரோவர் அங்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீரோடைகள் மற்றும் ஏரிகள் இருந்து உள்ளதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்து உள்ளது.
அந்த பகுதியில் களிமண் தாதுக்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ரோவர், மேற்பரப்பின் 22 மாதிரிகளை துளையிட்டு எடுத்து உள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள அமெரிக்க புவியியல் ஆய்வாளர் கிறிஸ்டன் பென்னட், “நாங்கள் 10 ஆண்டுகளாக இந்த பகுதியின் சுற்றுப்பாதை படங்களை ஆய்வுச் செய்து வருகிறோம், தற்போது, ஷார்ப் மலையில் அதிக அளவு களிமண் தாதுக்களை ஆய்வு செய்தது. கியூரியாசிட்டி செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாய் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டரால் இந்த தாதுக்கள் முதலில் அங்கு இருப்பது கண்டறியப்பட்டன என்று தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து கூறிய கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் களிமண் ஆய்வு இணைத்தலைவரான வலேரி ஃபாக்ஸ், ரோவரின் கேமரா டீல் ரிட்ஜ் வெளிப்புறம் மற்றும் ஸ்ட்ராத்டன் ஆகியவற்றின் பனோரமாவைப் படம் பிடித்து அனுப்பி உள்ளது. இது அலை, வண்டல் அடுக்குகளைக் கொண்டது, இது காற்று, நீர் அல்லது இரண்டாலும் ஏற்பட்டு இருக்க லாம்.”இந்த பாறைகளில் பதிவு செய்யப்பட்ட பண்டைய ஏரி சூழலில் ஒரு பரிணாம வளர்ச்சியை நாங்கள் காண்கிறோம்” என்று தெரிவித்து உள்ளார்.